அமைச்சரவைக் கூட்டத்தில் மஹிந்த கலந்து கொண்டாரா: நாமல், பந்துலவுக்கிடையில் குழப்பம்

🕔 June 9, 2022

திங்கட்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன கூறியதை நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

‘பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ எந்தவொரு அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அவர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார், அதனை அவர் மதிக்கின்றார்’ என, நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய பந்துல குணவர்த்தன; திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில்’ நடைபெற்றது என, தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்