யானை தாக்கி குழந்தை பலி: அட்டாளைச்சேனை பள்ளக்காட்டு பகுதியில் சம்பவம்

🕔 June 9, 2022

– சரவணன் –

ட்டாளைச்சேனை பள்ளக்காடு பகுதியில் யானை தாக்கியதில் 06 மாத ஆண் குழந்தை ஒன்று நேற்று (08) உயிரிழந்தது.

திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 06 மாதம் கொண்ட சுதர்சன் சதுர்சன் என்ற குழந்தையே இவ்வாறு பலியாகியது.

திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் – மனைவி அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முதலாளி ஒருவரின் மாடுகளை பராமரிக்கும் வேலையை பள்ளக்காடு பிரதேசத்தில் தங்கியிருந்து பார்த்து வந்தனர்.

இதன்போது சம்பவதினமான நேற்று மாலை 05 மணியளவில் அந்த பகுதியிலுள்ள மரத்தின் கீழ் பாயில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த யானை மரத்தின் கீழ் படுத்திருந்த குழந்தையை தாக்கியதையடுத்து குழந்தை சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தது.

இதனையடுத்து உயிரிழந்த குழந்தையை அங்கிருந்து மீட்டு அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்