ராஜிநாமா செய்கிறார் பஷில்

🕔 June 8, 2022

நாடாளுமுன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் அவர் நாளை விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக மேலும் கூறப்படுகிறது.

கடந்த வருடம் ஜுலை மாதம் 08ஆம் திகதி அவர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரானார். ஜயந்த கெட்டகொட பதவி விலகியமையை அடுத்து அந்த இடத்துக்கு பஷில் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் நிதியமைச்சரானார்.

இந்த நிலையிலேயே பஷில் ராஜபக்ஷ நாளைய தினம் ராஜிநாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை வறிதாக்கும் திட்டமொன்றும் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ, இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டவராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்