சிறுமி ஆயிஷா கொலை சந்தேக நபர் கைது: குற்றத்தையும் ஒப்புக் கொண்டார்

🕔 May 30, 2022

ண்டாரகமை – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதான 29 வயதான 03 பிள்ளைகளின் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பாணந்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரம், மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டார்.

தொடர்பான செய்தி: நேற்று காணாமல் போன பாத்திமா ஆயிஷா, வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்