தீர்ப்புக்கு எதிராக சஷி வீரவன்ச மேன்முறையீடு
இரண்டு வருட சிறைசத் தண்டனை விதிக்கப்பட்ட சஷி வீரவன்ச, அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.
கொடும்பு மேல் நீதிமன்றில் அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக, இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை (30) குறித்த மேன்முறையீட்டு மனு பரிசீலிக்கப்படவுள்ளது.
அதுவரையில், சஷி வீரவன்ச மறியலில் வைக்கப்படுவார் எனத் தெரியவருகிறது.
போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து இரண்டு கடவுச் சீட்டுக்ளைப் பெற்ற குற்றத்துக்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவிக்கு, இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றம், இரண்டு வருட சிறைத் தண்டனையுடன், 01 லட்சம் ரூபா அபராதத்தினையும் விதித்தது.
தொடர்பான செய்தி: சஷி வீரவன்சவுக்கு 02 வருடம் சிறைத் தண்டனை: நீதிமன்றம் உத்தரவு