சஷி வீரவன்சவுக்கு 02 வருடம் சிறைத் தண்டனை: நீதிமன்றம் உத்தரவு
போலி ஆவணங்களை பயன்படுத்தி கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சஷி வீரவன்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 100,000 ரூபா அபராதமும் விதித்தது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டு உட்பட இரண்டு கடவுச்சீட்டுக்களை மோசடியாகப் பெற்றுக் கொண்டதாக சஷி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக போலியான பெயர்கள் மற்றும் பிறந்த திகதிகளுடன் ஆவணங்களை சமர்ப்பித்த சஷி வீரவன்ச, முதலில் 2015 பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதன் பின்னர், 2020 ஜூலை மாதம், சஷி வீரவன்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான் பிடியாணை பிறப்பித்தார்.