கல்முனை இளம் முயற்சியாண்மையாளர்களின் சம்மேளனம் ஆரம்பம்
– எம்.என்.எம். அப்ராஸ் –
கல்முனை இளம் முயற்சியாண்மையாளர்களின் சம்மேளனம் எனும் வர்த்தக அமைப்பொன்று அண்மையில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
தன்நிறைவு கண்ட முயற்சியாண்மையாளர்களை உருவாக்கும் நோக்கிலேயே இந்த சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்மேளனத்தின் தலைவராக றிசாத் ஷெரீப், பொதுச் செயலாளராக எம்.எச்.எம்.ஹனீப் மற்றும் பொருளாளராக ஏ.ஆர். றிஸ்வான் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்மேளனத்தின் பொதுசன தொடர்பு செயலாளராக றிப்தி அலி, பிரதித் தலைவர்களாக எம்.எம். ஜெஸ்மின் மற்றும் எம்.என்.எம். இம்தியாஸ், உதவி செயலாளர்களாக ஏ.ஆர்.எம். நியாஸ் மற்றும் எம்.டி.எம். ஹினாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, டப்ளியூ.எம்.எம்.ஐ. இபாத், எம்.எச்.எம்.முபாரிஸ், எம்.வை.ஏ. அசாம், டப்ளியூ.எம்.எம்.ஐ. இம்தாத், எஸ்.எல்.ஜஹான்கீர், எம்.றிஸ்வான், ஏ. தௌபீர், யூ.எல்.எம். மபாஸ் மற்றும் எஸ்.எச்.ஸலாஹுதீன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.