முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பில், அமைச்சர் பிரசன்ன கடும் விமர்சனம்: அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு, முட்டுக் கொடுத்தவர் எனவும் கிண்டல்

🕔 January 21, 2022

ல்லாட்சி அரசாங்கத்திற்கு பின்னால் சென்ற மைத்திரி உள்ளிட்ட குழுவினர் விலகினாலும் அரசாங்கம் கவிழாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொடுத்த காரணத்தினால், கைவிடப்பட்ட உண்மையான சுதந்திரக் கட்சியினருக்கு பொதுஜன பெரமுனவை ஆரம்பித்தன் காரணமாகவே பாதுகாப்பு கிடைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் ழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரசன்ன ரணதுங்க இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது அரசாங்கத்தின் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. அவர்கள் விலகினாலும் அரசாங்கம் கவிழாது. பொதுஜன பெரமுனவை மகிந்த ராஜபக்ஷ ஆரம்பித்ததன் காரணமாவே, சுதந்திரக் கட்சியினர் பாதுகாக்கப்பட்டனர்.

பொதுஜன பெரமுன ஆரம்பிக்கப்படவில்லை என்றால், சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு காட்டிக்கொடுத்த காரணத்தினால், கைவிடப்பட்ட உண்மையான சுதந்திரக் கட்சியினருக்கு செல்ல இடம் இருந்து இருக்காது.

பொதுஜன பெரமுனவை ஆரம்பித்ததன் காரணமாவே சுதந்திரக் கட்சியினருக்கு பாதுகாப்பு கிடைத்தது. இதனை மறந்து விட்டு அன்று நல்லாட்சி அரசாங்கத்தின் பின்னால் சென்றவர்கள் தற்போது செயற்பட்டு வருகின்றனர்.

இவர்கள் ராஜபக்ஷவினரையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பது புதினம் அல்ல. இவர்களில் தலைவர் மைத்திரிபால சிறிசேன, அப்பத்தை சாப்பிட்டு விட்டு சென்றுதான், ஐக்கிய தேசியக் கட்சிக்கு முட்டுக்கொடுத்தார்” எனவும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்