தபால் நிலையம், கிறிஸ்தவ ஆலயத்துக்குரிய சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில், பெண் கைது

🕔 November 15, 2021

– க. கிஷாந்தன் –

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரில் இன்று (15) அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தின் முன்னாள் அமையப் பெற்றிருந்த சிலை ஆகியன உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில், பெண் ஒருவர் லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகசேனை நகரத்தில் இயங்கும் தபால் நிலையம் இன்று அதிகாலை உடைக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதேவேளை தபாலகத்துக்கு முன்பாக உள்ள – இருதய ஆண்டவர் கிறிஸ்தவ ஆலயத்தின் முன்பகுதியில் காணப்பட்ட கிறிஸ்தவ சமயத்துக்குரிய சிலை உடைக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஆலயத்தின் முன்பகுதியில் இருந்த ஏனைய பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பிரதேச மக்கள், லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின், குறித்த தபால் நிலையத்தில் உள்ள சமயலறைக்குள் சென்று, அங்கிருந்த 38 வயது மதிக்கதக்க பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொள்ளும் லிந்துலை பொலிஸார், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரரணைகைளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்