அத்தியவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள்: அகற்றப்படாத நிலையில் கொழும்பு துறைமுகத்தில்

🕔 November 4, 2021
அடையாளப்படம்

ரிமையாளர்களால் அகற்றப்படாத, அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருப்பதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக உரிமையாளர்கள் தங்களுடைய கொள்கலன்களை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

10,000 மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமான சீனியுடன், கிட்டத்தட்ட 350 கொள்கலன்கள், மேற்படி அகற்றப்படாத கொள்கலன்களில் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீனித் தட்டுப்பாட்டிற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டின் விளைவாக, கொழும்பு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் அகற்றப்படாமல் இருப்பதால், இலங்கையில் அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்