இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் மற்றும் வடக்கு ஆளுநர் திருமதி சார்ல்ஸ் சந்திப்பு
இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ல்ஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (28) செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இந்தியத் திட்டங்கள் மற்றும் வடக்கு மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் மற்றும் வீட்டுத் துறை தொடர்பான விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்கள்.