சம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு
– பைஷல் இஸ்மாயில் –
சம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களுடன் கணினி உள்ளிட்ட வைத்தியசாலைக்கு தேவையான பல உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ். றிஸ்காவிடம் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் டொக்டர் திருமதி இ. ஸ்ரீதர் மேற்படி பொருட்களைக் கையளித்தார்.
இதன்போது, வைத்தியசாலையில் நிலவிவரும் குறைபாடுகள் தொடர்பான விடயங்கள் பற்றிய தகவல்களை வைத்திய அத்தியட்சகரிடம் ஆணையாளர் கேட்டறிந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ. நபீல், வைத்தியர்களான ஏ.எல். நஸ்றின் ஜஹான், எம்.ரீ.சாக்கிரா பானு, சுதேச மருத்துவ திணைக்கள கணக்காளர் என். பாலநந்தன் மற்றும் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி சி.ரி. நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.