தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான ஆய்வரங்கு

🕔 November 24, 2015

SEUSL - 098
– எம்.வை. அமீர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 04 ஆவது வருடாந்த விஞ்ஞான ஆய்வரங்கு இன்று செவ்வாய்கிழமை பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற இவ் ஆய்வரங்கில் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் பிரதம அதிதிதியாக பங்கேற்றார்.

பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட பேராசிரியர் ஆர். சாந்தினி இந்த ஆய்வரங்கில் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொண்டார்.

இந்த ஆய்வரங்கில் 28ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.SEUSL - 0144SEUSL - 033

Comments

புதிது பேஸ்புக் பக்கம்