ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு, சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு கபீர் ஹாசிம் அழைப்பு

🕔 January 3, 2021

க்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளுமாறு, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மாவனல்ல பகுதியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போது, அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

தேர்தல் மேடைகளில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கூக்குரலிடப்பட்டது. தேர்தல்களுக்குப் பிறகும் அவர்களுக்கு எதிராக கூக்குரலிடப்பட்டது. எனவே எங்களுடன் அவர்கள் சேருவது கௌரவமானது.

“இந்த நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக நாங்கள் உள்ளோம். எங்களுடன் ஏராளமானோர் சேரவுள்ளனர். அந்த படையுடன் சேருமாறு உங்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்