கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்: பேராசிரியர் நீலிகா அறிவுரை

🕔 January 2, 2021

கொத்து ரொட்டி, சிற்றுண்டி வகைகள், ஃப்ரைட்றைஸ் போன்ற உணவுகளை முடிந்தளவு தவிர்ப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என, நுண்ணுயிர்கள் தொடர்பிலான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமநிலையான உணவை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், போதியளவு உறக்கம் மற்றும் உடற்பயிற்சி மிகவும் அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விட்டமின் டி குறைப்பாடு இருந்தால், அது குறித்து கவனம் செலுத்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழியமைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வாரமும், அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை நாட்டில் கொவிட் வைரஸ் வகைகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டுமெனவும், சில வேளைகளில் இலங்கையிலேயே இந்த வைரஸ் வகையில் மாற்றடைந்த புதிய வைரஸ் வகையொன்று உருவாகுவதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்