கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு 02 மில்லியன் யூரோ உதவி

🕔 December 17, 2020

லக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான கிளையானது ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 02 மில்லியன் யூரோ (இலங்கைப் பெறுமதியில் சுமார் 457 மில்லியன் ரூபா) பெறுமதியான நிதி உதவியை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

இலங்கையில் கொவிட்-19 இன் பாதிப்பை குறைப்பதற்கான அவசர செயல்பாடுகளுக்காக இந்த நிதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 நோயாளர்களின் பராமரிப்பை மேம்படுத்துதல் மற்றும் தொற்றுநோயைத் தடுத்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களுக்காக இந்த நிதி செலவிடப்படும்.

ஒழுங்கமைக்கப்பட்ட நோயாளர் பராமரிப்பு செயல்முறைகளை உருவாக்குவது சிறந்த திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் முடிவெடுப்பதற்கு உதவியாகவும் இந்த நிதி அமையும்.

அவற்றிற்கு மேலதிகமாக உதவியின் ஒரு முக்கிய பகுதி, கற்றல் செயல்பாட்டு அமைப்பின் முன்னேற்றம் மற்றும் பொது சுகாதார அவசர நிலைகளுக்கு பொறுப்பான சுகாதார அமைப்பின் திறனை எதிர்காலத்தில் நீடிப்பதற்கும் உதவும்.

இந்த நிதியானது ஏற்கனவே உள்ள தகவல் தொடர்பாடல் மற்றும் சமூக செயற்பாட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதோடு, தகவல் தொடர்பாடல் சாதனங்களை தரமுயர்த்தலையும் உறுதி செய்யும் ,அத்துடன் பாதிக்கப்படக்கூடிய நபர்கள், இளைஞர்கள், மற்றும் சமூக அமைப்புகளின் நகர்வுகளை ஊக்குவித்து சமூக அளவிலான நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும்.

இறுதியாக, அத்தியாவசிய சேவைகளைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியானது மக்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் சேவைகளை அணுக வழிவகுப்பதோடு, சர்வதேசத் தொற்று நிலைமையால் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் அடையாளப்படுத்துகின்றது.

இலங்கைக்கான நிதியானது சர்வதேச கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கெதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய செயற்பாடுகளின் ஒரு பகுதியாகும் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் ஜைபி கூறியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்துடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டானது, சுகாதாரத் துறையில் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டுவதற்கு மட்டுமல்லாமல், உள்ளூர் சமூக அமைப்புகளுடன் கைகோர்த்து பாதிக்கப்படக்கூடிய அபாயமுள்ள மக்களுக்கும் சிறப்புக் கவனம் செலுத்துகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்