திவிநெகும நிதி மோசடி வழக்கிலிருந்து பசில் உள்ளிட்டோர் விடுதலை

🕔 November 30, 2020

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகள் 04 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து சம்பந்தப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரதிவாதிகளை வழக்கிலிருந்து விடுவிக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க இன்று திங்கட்கிழமை வழங்கினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் திவிநெகும அபிவிருத்தி நிதியத்துக்குச் சொந்தமான 2,992 மில்லியன் நிதியை செலவிட்டு, திவிநெகும பயனாளிகளுக்கு வீட்டு உதவி வழங்கியதன் ஊடாக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்