பஷில் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

🕔 November 23, 2020

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் மேற்படி உத்தரவை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2015ஆம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில், அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திட்டத்தின் மூலம் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது, அவருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்