மத்ரஸா விவகாரங்கள் தொடர்பில் உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும்: அமைச்சர் பீரிஸ்

🕔 November 21, 2020

த்ரஸாகளில் ற்பிப்பதற்காக வீசா கேட்டு இலங்கை வருவோர் பற்றி உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.

அத்தகையோரின் பின்புலம், கடந்த காலம் போன்றவை பற்றியும் ஆராயப்பட இருப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலம் தொடக்கம் மத்ரஸாகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. மத்ரஸாகளுக்கான ஆட்சேர்ப்பு, மாணவர் அனுமதி போன்ற நடைமுறைகளை சீராக்க பொறிமுறையொன்று அமுலாக்கப்பட்டது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நடைமுறையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம், புலனாய்வு அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்பைப் பெறுவது அத்தியாசியமானதெனவும் அவர் கூறினார்.

மத்ரஸா பாடசாலைகள் குறித்து தாம் அடிக்கடி கவனம் செலுத்தி வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீஎல் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்