பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை, இணைய வழியில் நடத்துவதற்கு நடவடிக்கை

🕔 October 23, 2020

ல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையவழி மூலம் (Online) விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில், இணையவழி பரீட்சைகளை நடத்துவதற்கான தினங்கள் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றார்.

தற்சமயம் பல்கலைக்கழக கற்பித்தல் நடவடிக்கைகள் இணையவழி மூலம் இடம்பெற்று வருவதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் கூறினார்.

கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கையிலும், பரீட்சைகளை நடத்துவதிலும் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்