புத்தரின் உருவம் பதிக்கப்பட்ட புடவையை அணிந்து வந்த பெண் கைது

🕔 September 11, 2020

புத்தரின் உருவம் பதிக்கப்பட்ட புடவையை அணிந்துவந்த பெண் ஒருவர் நாரஹேன்பிட்டியில் வைத்து நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு வந்த குறித்த பெண்ணின் உடையை அவதானித்த வைத்தியசாலை அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மருத்துவர் ஒருவருடைய மன்னார் பகுதியிலுள்ள இல்லத்தில் உதவி பணிசெய்யும் குறித்த பெண், அந்த மருத்துவர் சுகயீனமடைந்த நிலையில், அவரை பார்க்க வந்துள்ளார்.

இவர் மருத்துவரது மகளின் வெள்ளவத்தை பகுதியிலுள்ள இல்லத்தில் தங்கியிருக்கின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் ஊடாக மருத்துவரது மகளுடன் பொலிஸார் தொடர்புகொண்டு பிறிதொரு சாரியை குறித்த பெண்ணுக்கு வழங்கும்படி பணித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்