பிரதமர் மஹிந்த, கடமைகளைப் பொறுப்பேற்றார்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
அதற்கிணங்க அவர் – அலறி மாளிகையில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.
ஓகஸ்ட் 05ஆம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் நாட்டின் 13வது பிரதமராக தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.