மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆராய குழு நியமனம்

🕔 July 2, 2020

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, முரண்பாடுகளை ஆராய்வதற்காக 04 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கொண்டுள்ளார்.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணம் தொடர்பிலான முரண்பாடுகளை ஆராய்ந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணம் தொடர்பாக சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்