அரிசிக்கான சில்லறை விலைகள்: அரசாங்கம் அறிவிப்பு

🕔 May 27, 2020

நாட்டில் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையினை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு தொடக்கம் இந்த விலைகள் அமுலுக்கு வரவுள்ளன.

அந்த வகையில், நாட்டரிசி ஒரு கிலோ 96 ரூபா, ஒரு கிலோ சம்பா அரிசி – 98 ரூபாய், ஒரு கிலோ கீரிச் சம்பா – 125 ரூபாய் என, விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அரிசியை பதுக்கி வைப்பதன் மூலம் – சில வர்த்தகர்கள் அரிசிக்கான செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ள நிலையிலேயே, இந்த விலை நிர்ணயத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் பிரபல அரிசி உற்பத்தியாளரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான டட்லி சிறிசேனவின் அரிசி ஆலையில், அதிகாரிகள் சோதனையொன்றினை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்