அம்பாறை மாவட்டத்தின் நான்கு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

🕔 April 24, 2020

ம்பாறை மாவட்டத்தின் 04 பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வௌியேறுவதற்கும் பொலிஸார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

உஹன, தமன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் ரஜவெவ, மடவலலந்த, பஹலலந்த மற்றும் நவகிரியாவ ஆகிய பகுதிகளுக்கே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மக்களுக்கு அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளிலிருந்து வௌியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெலிசர கடற்படையினர் இங்கு நடமாடியமையினை அடுத்து, இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெலிசர முகாமிலுள்ள 30 கடற்படையினர் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்