கடற்படையினர் 30 பேருக்கு கொரோனா தொற்று: ராணுவத் தளபதி உறுதிப்படுத்தினார்

🕔 April 24, 2020

வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏனைய கடற்படையினரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையை அடுத்து, மேலும் 29 உத்தியோகத்தர்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் ஜாஎல – சுதுவெல்ல பிரதேசத்தில் போதைப் பொருளுக்கு அடிமையான கொரோனா நோயாளிகள் சிலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த பகுதியில் உள்ள மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் மேற்படி கடற்படையினர் ஈடுபட்டிருதனர் என்றும், இதன் மூலமே அவர்கள் தொற்றுக்குள்ளானதாகவும் ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்