கொரோனாவினால், இன்று மாலை வரை மட்டும், நாட்டில் 15 பேர் பாதிப்பு

🕔 April 19, 2020

கொரோனாவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (மாலை 6.00 மணி வரையில்) மட்டும், 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இதுவரை 269 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

இருந்தபோதும், இவர்களில் 96 பேர் சுகமடைந்து தமது இடங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இலங்கையில் இதுவரையில் 07 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இருந்தபோதும் உலகளவில் 23 லட்சத்து 06 ஆயிரத்து 588 பேர் இதுவரையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதாகப் பதிவாகியுள்ளது.

இவர்களில் 588,804 பேர் சுகமடைந்துள்ளனர். 158,063 பேர் மரணமடைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்