அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்

🕔 April 8, 2020

– அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் முதலாவது கோரோனா நோயாளர் இன்று புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

அவர் வெளிநாடு சென்றிருந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் திகதி ஊர் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், சுய தனிமைப்படுத்தலில் அவர் இருந்ததாகவும் தெரியவருகிறது.

குறித்த நபரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதை அடுத்தே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் இன்றைய தினம் வெலிக்கந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நோயினால் பாதிக்கப்பட்டவருடன் நேரடியாகத் தொடர்புபட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தனிப்படுத்தவுள்ளதோடு, அவர் வசிக்கும் பகுதி இன்று இரவு கிருமிநாசினி விசிறப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளது என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்