19 மாவட்டங்களில் நாளை ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது

🕔 April 8, 2020

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் இந்த ஊரடங்குச் சட்டம், மாலை 4.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

பின்னர் இந்த மாவட்டங்களுகளில் அமுலாகும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு தளர்ந்தப்பட்டு, அன்றைய தினம் பிற்பகல் 04 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு வெளியேறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்