கொரோனா தொற்று காரணமாக, இலங்கையர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் மரணம்

🕔 April 5, 2020

லங்கையைச் சேர்ந்த நபரொருவர் கொரோனா பாதிப்பு காரணமாக அவுஸ்ரேலியா – மெல்போர்ன் நகரில் மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர் 52 வயதுடைய ஆண் என தெரியவருகிறது.

இந்த நிலையில் நாட்டில் இதுவரை கொரோனாவினால் 171 பேர் பாதிக்கப்பட்டதாக (இன்று மாலை 06 மணி வரை) சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் செய்திகள் குறிப்பிடுகின்றன.

நாட்டில் நோய்த் தொற்றுக்குள்ளான 05 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இதுவரை 29 நோயாளார்கள் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறமாக உலகளவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64,691 பேர் மரணமடைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்