கொரோனாவினால் நேற்று மரணித்தவரின் மனைவியும் பாதிப்பு

🕔 April 3, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றைய தினம் உயிரிழந்த நபர் அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர் என கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க இதனை தெரிவித்தார்.

ரத்மலான பகுதியைச் சேர்ந்த 58 வதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் நேற்று வியாழக்கிழமை இரவு தொற்று நோயியல் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் சம்பவித்த 04ஆவது மரணம் இதுவாகும்.

குறித்த நபர் தனது மனைவியுடன் கடந்த 16 ஆம் திகதி இந்தியா சென்று நாடுதிரும்பியுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும் இத்தாலியிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட குழுவினருடன் காணப்பட்டமையினால் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு, இந்தியாவிலேயே கொரோனா தொற்றுக்குள்ளானார்களா என்பது தொடர்பிலும் விசாரித்து வருகின்றனர்.

நேற்றைய தினம் உயிரிழந்த நபரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் குணமடைந்த நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்