ஜவாத், ஹமீட் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்: அம்பாறையில் தனித்து களமிறங்குகிறது, மக்கள் காங்கிரஸ்

🕔 March 19, 2020

– அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பொருட்டு, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் மற்றும் அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத் ஆகியோர் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.

வை.எல்.எஸ். ஹமீட் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் ஏற்கனவே வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, நிந்தவூர் பிரதே சபை தவிசாளர் ஏ.எம். தாஹிர், சம்மாந்துறையிலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர், பொத்துவில் பிரதேசத்தை பிரதிநிதித்துவப் படுத்தி ஊடகவியலாளர் முஷர்ரப், கலாநிதி ஏ.எல்.ஏ. கபூர் மற்றும் இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் மௌலவி ஏ.எல். நௌபர் உள்ளிட்ட 10 பேர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

தொடர்பான செய்தி: அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குகிறது மயில்: தலைமை வேட்பாளர் வை.எல்.எஸ் ஹமீட்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்