தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, உலமா சபை வேண்டுகோள்

🕔 March 15, 2020

வேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகளுக்காக பள்ளிவாசலில் ஒன்று கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

எழுத்து மூல அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கையை உலமா சபை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனமும், இலங்கை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தலுக்குகு அமைவாக, மக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்கள் தவிர்க்கபடல் வேண்டும் எனும் வகையிலேயே, இந்த வேண்டுகோளை தாம் முன்வைப்பதாகவும், அந்த அறிக்கையில் உலமா சபை குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய அரச ஸ்தாபனங்களினதும், அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவினதும் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறும், அதனை அமுல்படுத்துவதில் பள்ளிவாசல் நிருவாகிகள் கண்டிப்போடு நடந்து கொள்ளுமாறும், அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்