பாணின் விலை குறைகிறது: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு
பாணின் விலை 05 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜனவர்த்தன இதனைக் கூறியுள்ளார்.
இதற்கிணங்க நாளை 26ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் இந்த விலை குறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேக்கரி உரிமையாளர்களுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகவும், சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.