பொதுஜன பெரமுனவும், சுதந்திரக் கட்சியும் கூட்டணியமைத்தது: மஹிந்த தலைவர், மைத்திரி தவிசாளர்

🕔 February 17, 2020

பொதுஜன பெரமுனவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தாமரை மொட்டுச் சின்னத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது.

‘ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய’ என்ற பெயரில், இந்தக் கூட்டணி அமையவுள்ளதாக, பொதுஜன பெரமுனவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கட்சியின் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பொதுச் செயலாளராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, இந்தக் கூட்டணிக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் உப செயலாளராக உதய கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளதுடன் உப தவிசாளர்களாக திஸ்ஸ வித்தாரண, ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்