கடந்த ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானோர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறையிடலாம்
கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானமை தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் தமது முறைப்பாடுகளை இந்த ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க முடியும்.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பொறுப்பேற்கப்படுவதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
செயலாளர், 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, தொகுதி இல – 02, இரண்டாவது மாடி, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம், கொழும்பு – 07 என்ற விலாசத்தில் குறித்த முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.