நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் பிணையில் விடுதலை

🕔 January 5, 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கங்கொடவில நீதவான் நீதிமன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

05 லட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணையில் நாடளுமன்ற உறுப்பினர் விடுவிக்கப்பட்ட நிலையில், வௌிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி அவரின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்த நிலையில் பிஸ்டல் ஒன்றும் மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்