தலைமைப் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்: ஐ.தே.க. செயலாளர் அகிலவிராஜ் தெரிவிப்பு

🕔 November 25, 2019

க்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளார் என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.வின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்களைப் பரிசீலிப்பதாகவும், அதன்படி கட்சியின் பதவி நிலைகளில் இருந்து எதிர்காலத்தில் விலகுவதாகவும் ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாகத் அறிவித்தார் என அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றதும் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ரணில் விக்ரமசிங்க அண்மையில் பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்திருந்தார். இதனை அடுத்து இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதுடன் மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு ஒருதரப்பினரும் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு இன்னொரு தரப்பினரும் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டனர்.

அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியைத் தழுவ ரணில் விக்ரமசிங்கவே காரணம் என ஒரு தரப்பினர் குற்றம் சாட்டியதுடன், ரணிலை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்