நாளை நிறைவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம், டிசம்பர் வரை நீடிப்பு

🕔 October 15, 2015
Faizer musthafa - 011நாளை வெள்ளிக்கிழமையுடன் ஆயுட்காலம் நிறைவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலத்தை, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  இந்த மாதம் 31ஆம் திகதியுடன் ஆயுட்காலத்தை நிறைவுசெய்யும் மேலும் இரண்டு உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலமும் டிசம்பர் 31ஆம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அடுத்த வருடம் மார்ச் மாதமளவில், அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தலை ஒருதடவையில் நடத்தும் முகமாகவே இந்த காலநீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்