அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் மரண தண்டனை

🕔 July 26, 2019

மெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு சட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு சட்டமா அதிபர் வில்லியம் பார்; ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு சிறைச்சாலை திணைக்களத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள ஐந்து கைதிகளும் குழந்தைகள் அல்லது முதியவர்கள் தொடர்பான கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று, சட்டமா அதிபர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து கைதிகளுக்காக மரண தண்டனைகளை எதிர்வரும் டிசம்பர் மற்றும் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நிறைவேற்றுவதற்கு திகதிகள் குறிக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்