புதிய வவை ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளதாக, வடகொரியாக தெரிவிப்பு

🕔 April 18, 2019

புதிய வகையான ஆயுதம் ஒன்றை தாம் சோதனை செய்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசசின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ள போதும், குறித்த ஆயுதம் பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையை வடகொரியத் தலைவர் கிம் மேற்பார்வையிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சில மாதங்களுக்கு முன்னர் கலந்து கொண்ட மாநாடு தோல்வி அடைந்த பிறகு, வட கொரியா மேற்கொண்டுள்ள முதல் ஆயுத பரிசோதனை இதுவாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்