உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக, பெண்கள் மூவருக்குப் பதவி உயர்வு
பிரதம பொலிஸ் பரிசோதகர் தரத்திலுள்ள மூன்று பெண்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்படி மூவரினதும் சிரேஷ்டத்துவம் மற்றும் திறமை ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு, இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
2015 பெப்ரவரி 27ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், இந்த பதவி உயர்வுகளை வழங்குவதற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
டப்ளியு.ஏ.என்.பி. வீரகோடி, என்.ஏ.எஸ். மாரம்பே மற்றும் ஏ.ஏ.ஜே.கே. செனவிரத்ன ஆகியோரே இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.