ரணில் தரப்பிலிருந்து தாவிய 04 பேருக்கு அமைச்சுப் பதவிகள்

🕔 October 29, 2018

னாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை நியமித்த 14 அமைச்சர்களில் 04 பேர், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து கட்சி மாறியவர்களாவர்.

இவர்களில் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும், வடிவேல் சுரேஷ் மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோருக்கு முறையே ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

தனித்து ஒரு கட்சி ஆட்சியமைக்கும் போது, 30 பேரைக் கொண்ட அமைச்சரவை ஒன்றினையே அமைக்க முடியும் என, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் கூறுகிறது.

தற்போது 12 பேர் மட்டுமே, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவாக இருந்த 107 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை (ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 106 பேர், மு.காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர்) 103 ஆக குறைந்துள்ளது.

இதேவேளையில், மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 100ஆக அதிகரித்துள்ளது.

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கையின் நாடாளுமன்றத்தில், 113 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் தரப்பு, பிரதமர் பதவியைப் பெற்றுக் கொண்டு ஆட்சியமைக்க முடியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்