பதவி உயர்வு பெற்றுள்ள அன்வர்தீனுக்கு, கல்முனை பிரதேச செயலகத்தினர் பிரியாவிடை

🕔 October 15, 2018
– எஸ். அஷ்ரப்கான் –

ம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி – பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள எஸ். அன்வர்தீனுக்கு கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருது சீ பிரீஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

வலுவாதார அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி நிலையினைக் கையாளும் விசேட திட்டத்துக்கான பணிப்பாளராக, தற்போது அன்வர்தீன் பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ளார்.

கல்முனை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. ராஜதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திட்டமிடல் பணிப்பாளர் அன்வர்தீன் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதோடு, வாழ்த்துப்பா, நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வில் இலங்கை நிர்வாக சேவையில் தரம் -01க்கு பதவி உயர்வு பெற்ற கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனியும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. ராஜதுரை மற்றும் கணக்காளர் யூ.எல். ஜவாகிர் ஆகியோரின் சேவைகளை பாராட்டியும் இதன்போது கௌரவம் வழங்கப்பட்டது.

கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு அனைத்து உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பூரண ஒத்துழைப்புடன் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்