அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும், சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் இனி கலந்து கொள்ள முடியாது: மஹிந்த தெரிவிப்பு

🕔 July 3, 2018

ன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 16 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டங்களில் இனி பங்கேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினர், முதல் தடவையாக நேற்று திங்கட்கிழமை ஒன்றிணைந்த எதிரணியினரின் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதனையடுத்து, ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

54 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த ஒன்றிணைந்த எதிரணி தற்போது 70 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில், இதன்போது கலந்துரையாடப்பட்டது எனவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்