ஜனாதிபதியின் ஆலோசகர், கொலை அச்சுறுத்தல் விடுக்கிறார்: சந்தியா எக்னலிகொட

🕔 June 27, 2018

னாதிபதியின் ஆலோசகராக பணிபுரியும் உலப்பன சுமங்கள தேரர், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாக,காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தனக்கு எதிராக சுமங்கள தேரர்  பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

“எனது கணவரை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவராக, தொடர்ந்தும் தேரர் சித்தரித்துவருகின்றார்” எனவும் சந்தியா தெரிவித்துள்ளார்.

ஆனால், இது பொய் என தெரிவித்துள்ள சந்தியா, உண்மையான குற்றவாளிகளிடமிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே, தனது கணவர் மீது இவ்வாறான குற்றச்சாட்டினை தேரர் சுமத்துவதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

“என்னுடையதும் எனது பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்காக ஜனாதிபதி தலையிடவேண்டும். பௌத்தமத தலைவர்களும் இந்த விடயத்தில் தலையிடவேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்