ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

🕔 June 18, 2018

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுவிக்க கோரி, பௌத்த விக்குகள் கொழும்பில் இன்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்பாட்டமொன்றினை ஆரம்பித்துள்ளனர்.

இதனால், கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவியை நீதிமன்ற வளாகத்தினுள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட குற்றத்துக்காக ஞானசார தேரருக்கு ஒரே தடவையில் அனுபவிக்கும் வகையிலான இரட்டை ஆறுமாத கழிடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்