அரசாங்கம் சட்டவிரோதமானது: பேராசிரியர் பீரிஸ்
நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமானது என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக, இந்த அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“நாட்டை சரியாக ஆட்சி செய்ய முடியாது என்பதை அரசாங்கம் தெளிவாக காட்டியுள்ளது.
இதனால், அரசாங்கம் பதவி விலக வேண்டும். அதேவேளை கூட்டு எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுன பெரமுனவும் இணைந்து எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளன.
அரசாங்கம் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது. மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது” என்றார்.