கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை; திகன சம்பவத்தினையடுத்து அமைச்சு தீர்மானம்

🕔 March 5, 2018

ண்டி நிருவாக மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும், நாளை செவ்வாய்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கண்டி மாவடத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

திகன பிரதேசத்தில் சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக, அங்கு பொலிஸ் ஊரடங்குச சட்டம் நாளை காலை 6.00 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திகன பிரதேசத்தில் முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள், பள்ளிவாசல் மற்றும் வீடுகள் தாக்கப்பட்டதோடு, பல இடங்களில் தீ வைக்கப்பட்டுமுள்ளன.

மேலும், முஸ்லிம்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக

இவ்வாறான நிலையிலேயே, நாளை கண்டி மாவட்ட பாடசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்