நாடாளுமன்ற அமர்வுகளை முஸ்லிம் உறுப்பினர்கள் பகிஷ்கரிக்க வேண்டும்: மரிக்கார் வேண்டுகோள்

🕔 June 5, 2017

– அஷ்ரப் ஏ சமத் –

ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதனை தொடா்ந்து,  நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிப்பதற்கும் தீர்மானமொன்றுக்கு, முஸ்லிம் உறுப்பினர்கள் வரவேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காா் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு இவ்வாறான அதிா்ச்சி வைத்தியம் கொடுக்கும் தீர்மானமொன்றினை மேற்கொள்வதற்காக, அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிா்வரும் தினங்களில் ஒன்று கூட வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வெள்ள அனா்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நேற்று ஞாயிற்றுக்கிழமை மெகட கொலநாவை ரஹ்மானியா ஜூம்ஆப் பள்ளிவாசலில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். ஞானசார தேரரை  இதுவரை  ஏன் அரசாங்கம் கைது செய்யாமல் இருக்கிறது என்று, அங்கிருந்த முஸ்லிம் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“இந்த நாட்டில் 30 வருடகால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர தங்களை அர்ப்பணித்து செயலாற்றிய பாதுகாப்பு மற்றும் பொலிஸ்  புலனாய்வு பிரிவுக்கு, ஞானசார தேரரை கண்டு பிடிக்க முடியாமல் இருப்பது  இந்த நுாற்றாண்டின் ஒரு பெரிய நகைச்சுவையாகும்.

இந்த விடயத்தில் நீதித்துறையினரும், பொலிசாரும் நடந்து கொள்ளும்  விதத்தினைப் பார்க்கும் போது, ஞானசார தேரரை இந்த கூட்டு அரசாங்கத்தில் உள்ள ஒரு சக்தி கைது செய்ய விடாமல் தடுப்பதையும் அவரை பாதுகாப்பதையும் எமக்கு பறை சாற்றுகிறது.

நாம் ஏற்கனவே  ஞானசார தேரா் விடயத்தில் அரசாங்கத்தின் உயா்மட்டத்தினைச் சந்தித்து தனிப்பட்ட ரீதியிலும்  கூட்டாகவும் அழுத்தம் கொடுத்துள்ளோம்.
இந்த விடயம் தொடா்பாக நாம் உடனடியாக இறுதித் தீா்மானம் ஒன்றுக் வரவேண்டும். எமது தீா்மானத்தினை அரசாங்கம் செவி சாய்க்காத வரை, எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, சகல முஸ்லிம் நடாளுமன்ற உறுப்பினர்களும் எதிா்வரும் நாடாளுமன்ற அமா்வுகளைப் புறக்கணிக்கும் தீர்மானம் ஒன்றுக்கு வர வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்